Monday 28 October 2013

^ஏமாற்றம் ^

 
  நீ.............................................
என் "கண்ணில்" உள்ளாய்
    என் "இதயத்தில்"  உள்ளாய் என்றாய் ...!
*மகிழ்ச்சியடைதேன்*.
    இப்பொழுதுதான் தெரிகின்றது....?
கண்ணீரில் தத்தளிக்கவும்
      இதயத்தில் துடி துடிக்கவும்
அங்கு என்னை வைத்தாய் என்று ......


                                                                                       க.வரதராஜன்....

Tuesday 24 September 2013

காதலில் காத்திருப்பதும் சுகம்தான்.....

எப்போது விடியம் என்று காத்திருந்தேன்...
      என்னவளை  நினைவில் காண காத்திருந்தேன்..... 

கடைக்கண் பார்வைக்கு காத்திருந்தேன்..... 
      கயல் விழியை மறைக்கும் முடியைக் காண காத்திருந்தேன்..... 

முத்து சிதறும் சிரிப்பைக் கேட்க காத்திருந்தேன்..... 
     முழு நிலாவன முகத்தை காண காத்திருந்தேன்..... 

இதோ வருவாள் என்ன சாலையில்  காத்திருந்தேன்.....  
    இன்னும் காத்திருக்கிறேன்... அவள் என் காதலியாக வருவாள்என்று....

                                  "ஆம் காதலில் காத்திருப்பதும் சுகம்தான் "
                                                                                                          
க.வரதராஜன்....

நீ என்னுடன் இல்லாத போது ...!

சொர்க்கமும் 
       நரகம் தான் ......"நீ" 
 "என்னுடன்" இல்லாத போது .........
                               
                                                         க.வரதராஜன்

Saturday 21 September 2013

வெற்றியின் ஊக்கிகள்...


உலகம் என்னை பார்த்து சிரித்தது.

ஒவ்வொரு முறையும் நான் "விழுவதைக் கண்டு"

நன்றி,நன்றி....

உங்களின் சிரிப்புதான் எனது வெற்றியின் 

ஊக்கிகள்...


                                                                  க.வரதராஜன்
                                                       

Friday 13 September 2013

எந்தனை பெயர்கள் இந்த காதலுக்கு ....


பார்க்க தெரிந்தும் "குருடன்",

பசி இருந்தும் "உண்ண தெரியாதவன்", 

வழி தெரிந்தும் "பாதை மாறியவன்",

என எந்தனை பெயர்கள் இந்த "காதலுக்கு" ....
                                          
                                                              க.வரதராஜன்.